மனம் திருந்திய மாணவர்- திருடிய பணம் ஒப்படைப்பு

புதுக்கோட்டை:படிப்புசெலவிற்காக, ஓய்வு பெற்ற துணை தாசில் தாரின் மனைவியை ஏமாற்றி, ஐந்துலட்சம் ரூபாயை திருடிய கல்லுாரிமாணவர், திடீரென மனம்திருந்தி, இரண்டு நாளில், பணத்தை திருப்பிகொடுத்த அதிசய சம்பவம், புதுக் கோட்டை யில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜ மாணிக்கம், 75; ஓய்வுபெற்ற துணைதாசில்தார். இவரது மனைவி கார்த்திகாயினி, 70. கடந்த, 24ம்தேதி, இருவரும் வங்கிக்கு சென்று, ஐந்துலட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு, மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பினர்.
ராஜமாணிக்கம், மனைவியை வீட்டில் விட்டு விட்டு, பேரனை அழைத்து வர சென்றார். அவர் சென்ற சிறிதுநேரத்தில், வீட்டிற்குவந்த வாலிபர், கார்த்திகாயினியிடம் ஒரு பாட்டிலைக்கொடுத்து, குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவர், பணப் யை ஹாலில் வைத்துவிட்டு, தண்ணீர்பிடிக்க உள்ளே சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது, தண்ணீர் கேட்ட வாலிபரையும், பணப் பையையும் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகாயினி, கணவருக்கு உடனே தகவல் தெரிவித்தார். ராஜமாணிக்கம், கணேஷ்நகர் போலீசில் புகார் செய்தார்.

இந்தநிலையில், 26ம் தேதி, ராஜமாணிக்கம் வீட்டிற்கு வந்த வாலிபர், 'உங்களது வீட்டில் பணத்தை திருடியது நான்தான்' என தெரிவித்து, ராஜமாணிக்கம், கார்த்திகாயினியிடம், 4.5 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, காலில்விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
தான் செலவழித்த பணத்துக்குப்பதிலாக, தன்னுடைய மோட்டார் சைக்கிளை வைத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். பணம் திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்த ராஜ மாணிக்கம், 'போலீசில் புகார் கொடுத்துள்ளதால், அவர்கள் மூலம்தான் தீர்வு காண முடியும்' என தெரிவித்து, போலீசாருக்குதகவல் தெரிவித்தார்.

வாலிபரிடம், போலீசார் விசாரித்ததில், திருச்சிமாவட்டம், விராலி மலையைச் சேர்ந்த ......., 22, என்பதும், தனியார் பாலி டெக்னிக் கல்லுாரியில் இரண்டாமாண்டு மாணவர் என்பதும் தெரிய வந்தது. படிப்புச்செலவுக்காக, பணத்தை எடுத்ததாகவும், தவறென உணர்ந்ததால், மீண்டும் ஒப்படைத்ததாக வும் தெரிவித்தார்.இதனிடையே, ராஜமாணிக்கம், புகாரைத்திரும்ப பெற்றார். ........ன் பெற்றோர், மீதித்தொகை, 50 ஆயிரம் ரூபாயை, ராஜமாணிக்கத்திடம் வழங்கினர். இவ்வளவிற்குப் பிறகும், மாணவரை, போலீசார் விட்டதாக தெரிய வில்லை. வேறு வழக்குகளில், மாணவருக்கு தொடர்பு உள்ளதா எனப் புதுக்கோட்டை, டி.எஸ்.பி., பாலகுரு விசாரித்து வருகின்றார்.
மேலும் பல செய்திகளை காண தினமலர் இணையதளத்திற்கு செல்லவும்.
நன்றி- தினமலர்

மேலும் சில இது தொடர்பானவைகள்

மனமே தெளிவு பெறு
நம் மனம் ஒரு ஆழ்கடல் போன்றது. அதில் பல துன்பங்கள் அலைகளைப் போல நம்மைத் தாக்கும். சுனாமி போல பிரச்சனைகள் சீர்தூக்கும். வாழ்வில் இன்பங்களற்று துன்பங்களே உங்களை வந்து சூழலாம். வெற்றிகள் உங்களை எட்டிக்கூட பார்க்காமல் தோல்விகளையே தரலாம். ஆனால் இதையெல்லாம் கண்டு பயந்துவிடாமல், இதை எதிர்த்து போராட உங்கள் மனம் தெளிவு பெற்றிருக்க வேண்டும். நம் மனம் முழுமையாக தெளிவு என்னும் மாபெரும் சக்தியால் சூழ்ந்திருந்தால், துன்பமும் உங்களிடம் நெருங்க முடியாமல் துன்பப்படும். படிப்பில் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி, அன்பில் தோல்வி என உலகத்தில் தோல்விகளே உங்கள் வாழ்வை சிறைப்பிடிக்கலாம். மனதை தொய்வடையச் செய்யலாம். அதற்காக நீங்கள் வீழ்ந்து விடக்கூடாது. அதை எதிர்த்து போராடவும், நம் வாழ்வை தோல்விகளற்று சிறப்பானதொரு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளவும், என்ன வழியோ அதை அடைய முயற்சிக்க வேண்டும். அதை தேடி நேரத்தைக் கழிக்காமல், அதை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும். பலர் உங்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கலாம். ஆயிரம் கொடுஞ்சொற்களால் உங்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க முயற்சிக்கலாம். ஏளனமாக சிரிப்பவர்களைப் பார்த்து, அவர்கள் சிரிப்பார்களே என்று எண்ணி, மேடை ஏறாமல் இருந்திருக்கலாம், விவேகானந்தர். ஆனால், அந்த நேரத்தில் ஏளனமாக சிரித்தவர்களை தன் வார்த்தைகளில் ஈர்த்தார் என்றால், அங்கு அவர் மனதில் தெளிவு பெற்றிருந்ததே மூலக்காரணம்.
நம் மனது தெளிவு பெற, உங்களைப் பற்றி முழுமையாக சிந்தியுங்கள். நீங்கள் முதலில் உங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை நீக்குங்கள். உலகத்தை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள்.பரந்த மனப்பான்மையை வளர்த்துக்
கொள்ளுங்கள். பிறர் மீது அன்பு கொள்ள வேண்டும். பிறரின் நலனில் எவ்வித பிரதிபலனுமின்றி உதவி செய்ய வேண்டும்
“ஏளனமாக பேசுபவர்களின்  வார்த்தைகளைக் கண்டு நொந்துவிடாதே! அமைதியாய் இரு. நீ வானுயரும் அளவு புகழை அடையும்போது,
அவர்களே வருந்துவார்கள். அவர்களை நினைத்து” எனவே, இவைகளைக் கண்டு துவண்டு விடாமல் இருக்கவும், துன்பங்கள் நம்மை தொடராது இருக்கவும் நம் மனம் தெளிவு பெற்றிருக்க வேண்டும்.  சரி, அப்படியென்றால், மனம் தெளிவு பெற நாம் என்ன செய்ய வேண்டும்? என்னும் கேள்வி நிச்சயம் நம்முள் எழும்.  நம் மனது தெளிவு பெற, உங்களைப் பற்றி முழுமையாக சிந்தியுங்கள். நீங்கள் முதலில் உங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை நீக்குங்கள். உலகத்தை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறர் மீது அன்பு கொள்ள வேண்டும். பிறரின் நலனில் எவ்வித பிரதிபலனுமின்றி உதவி செய்ய வேண்டும். மனிதாபிமானம் கொள்ள வேண்டும். பேராசை, பொறாமையை மனதிலிருந்து தூக்கி எறிந்து நல்லவைகளையே நினைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பிறர் மனம் சிறிதும் காயப்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரியோர்களுக்கு மரியாதை தருவதை எந்த சூழ்நிலையிலும் குறைத்துவிடக்கூடாது. “நான்” என்ற அகத்தையை முழுமையாக அகற்றிவிட வேண்டும். இவை போன்ற இன்னும் பல நேர்மறை எண்ணங்கள் நிச்சயம் நம் மனதை தெளிவுபடுத்தும். உங்கள் மனம் சில சமயம் சஞ்சலம் அடையலாம். அந்த சமயத்தில் நீங்கள் விரும்பும் நூல்களை படிக்கலாம். இசையை ரசியுங்கள்! இயற்கையை சுவாசியுங்கள்! தனிமையில் அமர்ந்து உங்களுடைய நிறை, குறைகளை அறியுங்கள். நிறைகளை வளர்க்கப் பாடுபடுங்கள். குறைகளைக் குறைக்க தீவிர முயற்சி எடுங்கள். நிச்சயம் ஒவ்வொரு தனித்திறமைகள் இருக்கும். மறைத்து வைத்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள். உங்களுள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அனைவரும் ஒருவரே. அந்த தெய்வீகத்தை அடையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் மனம் தெளிவு பெறும். உங்களுள் தன்னம்பிக்கை என்னும் சக்தி பிறக்கும். கண்டிப்பாக ஒருநாள் மனம் முழுமையாக தெளிவு பெறும். அன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றிகளாய் உங்களை வந்து சேரும். மனதை தெளிவுபடுத்துங்கள்!  வாழ்வை வளப்படுத்துங்கள்!!

தவறான சிந்தனை வேண்டாமே சிந்தனை தெளிவு பெற -

சிலர் தன் மீது தானே முத்திரை குத்திக்கொண்டு கஷ்டப்படுவார்கள். நான் சரியில்லை என்று தன் மீது முத்திரை குத்திவிட்டு அதனால்தான் என் குடும்பம் கஷ்டப்படுகிறது என்று நினைப்பது உண்டு.  பலர் நான் ராசி இல்லாதவன், உதவாதக்கரை, எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தங்களுக்கு முத்திரை குத்திக் கொண்டு தங்களையும், மற்றவர்களையும் கஷ்டப்படுத்துவார்கள். வாழ்க்கையில் எந்தத்தடங்கல் வந்தாலும் இவர்கள் தாங்கள் சரியில்லை என்ற கண்ணோட்டத்துடன் பார்த்து பார்த்து தங்களை வருத்திக்கொள்வார்கள்.  உங்கள் வாழ்க்கையில் எந்த சூழ்நிலைகளில் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்கள்? அந்தச்சூழ்நிலைகளில் உங்களில் உணர்வு என்னவாக உள்ளது? என்று கூர்ந்து கவனியுங்கள்.  உங்கள் உணர்வு கோபம் - பயம் - துக்கம் - கவலை - போன்றதாக இருக்கலாம். மன உளைச்லுக்கான சூழ்நிலை மற்றும் உணர்வுகளைக் கண்டவுடன் அதற்கான காரணத்தை நோக்குங்கள். அத்தகைய சிந்தனை முறை இருப்பின் கீழ்வரும் கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.  • இப்படி நான் சிந்திப்பதன் விளைவு என்ன? நான் மிகவும் மதிப்பளிப்பவர்கள். நான் இவ்வாறு சிந்திப்பதை விரும்புவார்களா? எனக்கு பிடித்தமானவர்கள் இத்தகைய சிந்தனை முறையை பயன்படுத்தினால் நான் அவர்களை இவ்வாறே சிந்திக்க ஊக்குவிப்பேனா? இது போன்ற கேள்விகள், முறையற்ற சிந்தனையின் ஒட்டத்தை முற்றிலும் முறிக்கும். அகற்றும். அந்த நேரத்தில் நன்கு மூச்சை இழுத்து வெளியே விடுங்கள். மூச்சை நன்கு இழுத்து விடும் போது இது ஒரு புதிய தருணம் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். இந்த பயிற்சியால் கடந்த கால தவிப்பில் இருந்து மனம் விடுபட்டு நிகழ்காலத்துக்கு வரும். அப்பொழுது ஒளியின் பயனால் விலகிய இருள் போல, முறையற்ற சிந்தனை நீங்கி புதிய சிந்தனை வளர வாய்ப்பு உண்டாகும். மனமும் தெளிவு பெறும்.தெளிவு பெற்ற மனம்....நல்வழி காட்டும்...
தவறான சிந்தனை முறையில் இருந்தது தெளிவு பெற


சிந்தனைத் துளிகள் உங்களுக்காக!

கால்விரல் இல்லை என்பதற்காக கவலைப்படாதே காலே இல்லாதவனைப் பார்த்து நீ ஆறுதல் அடைந்து கொள்.

நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயோ அப்படியானால் நேரத்தை வீணாக்காதே ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் உருவாக்கப்பட்டது.

இளமையில் தோல்வியடைந்தால்
கவலை கொள்ளாதீர். அடுத்தடுத்து முயன்று வெல்லுங்கள். இளமை வெகுவிரைவில் கடந்து சென்றுவிடும்.

நன்மை செய்ய பிறந்த நீ நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு.

பிறர்படும் துன்பத்தை கண்டு கண்ணீர் விடுவதை விட அவர்களது கண்ணீரை துடைக்க ஏதாவது செய்வதே மேல்.

பண்பில்லாத நண்பனை விட, பண்புள்ள பகைவன் மேலானவன்

துன்பம் இல்லாமல் இன்பத்தை அடைந்தவனுக்கு அவனடைந்த இன்பமே ஒருநாள் துன்பமாகும்.

இன்பத்தில் பங்கெடுத்து துன்பத்தில் தூரச் செல்பவன் உறவை துண்டிப்பதே மேல்.

உலகத்தை நேசிக்க கற்றுக் கொள் ஆனால் ஒருவரையும் ஆழமாக நம்பி விடாதே.

நீ வாழ்க்கையில் உயரும் போது மனிதர்களிடம் சுமுகமாக இரு ஏனெனில் நீ கீழே இறங்கும் போது அவர்களை சந்திப்பாய்.

நண்பனின் உடலில் ஒரு பாகமாக இரு அப்போதுதான் அவனுக்கு ஏற்படும் காயம் உனக்கும் வலிக்கும்.

ஒரு மணிநேரத்தில் ஒரு சிறந்த நண்பனை இழந்து விட முடியும். ஆனால் ஓர் ஆண்டு சென்றாலும் ஓர் நல்ல நண்பனை பெற முடியாது.

நம்பியது தோல்வியடையும் போது எல்லாமே நிலைமாரி விட்டதாக தோன்றும் ஆனால் தோல்வியிலும் முயற்சியை கைவிடக் கூடாது.

எல்லாமே போய்விட்டதென கவலைப்படாதே உன்னிடம் எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது.

குறைவாக சிந்திக்கும் மனிதர்கள் தான் அதிகமாக பேசுவார்கள்.